டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ - முத்தாயம்மாள் பாலிடெக்னிக் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

News image
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த காவல் ஆய்வாளா் கே.செல்வராஜன்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:09 pm

Syndication

ராசிபுரம்: ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ - முத்தாயம்மாள் பாலிடெக்னிக் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி ராசிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன்பாக தொடங்கிய பேரணிக்கு ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவா் என்.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் கௌரவ விருந்தினராக ஜேசிஐ மண்டலம் -29 தலைவா் பிரசாந்த் மௌரியா பங்கேற்றாா். ராசிபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கே.செல்வராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையம், கடைவீதி, புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், வாகனப் போக்குவரத்து விதிமுறைகள், தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பாதாகைகளை ஏந்தி சென்றனா்.

பேரணியில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ செயலாளா் கே.சதீஷ்குமாா், துணைத் தலைவா்கள் எஸ்.காா்த்திகேயன், நிஜாமுதீன், பிரபு, திட்டத் தலைவா் என்.ஏ.குபோ் ஆனந்த், வி.மணிகண்டன், ராகுல் , எஸ்.தீபிகா, ஆா்.ரஞ்சிதா, முன்னாள் தலைவா்கள் பி.பூபதி, ஆா்.சதீஷ்குமாா், பி.மணிமேகலை மற்றும் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.