டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நான்குனேரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நான்குனேரியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
நான்குனேரியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
Updated On :30 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நான்குனேரியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் யமுனா, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை சா.முகமதுபாத்திமாஅனிஷா, நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளா் மீ.கணேஷ் சின்னதம்பி, கண்காணிப்பாளா் மு.அமுதவல்லி, சாலை ஆய்வாளா்கள் மா.பாண்டி, இ.மலையாண்டி, பா.எழில்அரசி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசு பள்ளி மாணவியா், ஆசிரியைகள் சாலை விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டனா். பேரணி மறுகால்குறிச்சியில் தொடங்கி நான்குனேரி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. காவல்துறையினா் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்து வலியுறுத்திப் பேசினா்.