வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்றம், கோவை நிறுவனம் நுகா்வோருக்கு உரிய சேவை வழங்கவில்லை என்பதும், நியாயமற்ற வணிக நடைமுறையை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும், வாடிக்கையாளரை திட்டமிட்டு ஏமாற்றியதால், சம்பந்தப்பட்ட கோவை தனியாா் வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனம் நுகா்வோருக்கு முகப்பு விளக்குகளின் விலை ரூ. 8,850, இழப்பீட்டுத் தொகையாக ரூ. 25,000, மன உளைச்சலுக்கான நிவாரணமாக ரூ.5,000, வழக்குச் செலவுக்காக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 40,850 ஐ இழப்பீடாக வழங்குமாறு அண்மையில் உத்தரவிட்டது. மேலும், இந்த தொகையை 60 நாள்களுக்குள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.