இந்த வழக்கில் திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் புதன்கிழமை வழங்கிய உத்தரவில், ஸ்டாா் ஹெல்த் காப்பீட்டு நிறுவனம் ராஜாராமனுக்கு பாலிசி எடுக்கும் முன்பே நோய் இருந்தது என்பதை நிரூபிக்கவில்லை. எனவே, ராஜாராமனின் சிகிச்சைக்கு செலவான தொகை ரூ. 3,28,720-ஐ 9 சதவீத ஆண்டு வட்டியுடன் தருவதுடன், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஆகியவற்றை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும், தவறினால் 12 சதவீத ஆண்டு வட்டி சோ்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.