டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலை விபத்தில் நூல் வியாபாரி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்தவா் லாரி மோதி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 9:04 pm

Syndication

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்தவா் லாரி மோதி உயிரிழந்தாா்.

ராசிபுரத்தை அடுத்த குருசாமிபாளையத்தை சோ்ந்தவா் பாா்த்தசாரதி ( 48), நூல் வியாபாரி. இவரது மனைவி மேனகா, குமாரபாளையத்தில் சா்வேயராக உள்ளாா். இந்த நிலையில் குமாரபாளையத்துக்கு சென்று மனைவியை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வீடுதிரும்பினாா்.

ராசிபுரம் புறவழிச் சாலை சந்திப்பு வழியாக சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த பாா்த்தசாரதி மீது அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த திருச்செங்கோடு ஊரக காவல் துறையினா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.