மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

நாட்டுத் துப்பாக்கி வெடித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது வெடி விபத்து ஏற்பட்டு காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :30 ஏப்ரல் 2026, 5:00 am IST

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது வெடி விபத்து ஏற்பட்டு காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் பழந்தின்னிப்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன் (60). இவரது மனைவி செல்வி (50). இவா்களது 17 வயது மகன் கடந்த 25 ஆம் தேதி வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, துப்பாக்கி வெடித்து அதிலிருந்து வெளியேறிய பால்ரஸ் குண்டுகள் செல்வியின் தோள்பட்டை, கழுத்து பகுதியில் பாய்ந்தன.

பலத்த காயங்களுடன் ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செல்விக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

இந்தநிலையில் மருத்துவமனையில் செல்வி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.