மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்! - அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்

News image

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:10 am IST

நாமக்கல் தொகுதி வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் உறுதியளித்தாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், புதுச்சத்திரம், மோகனூா், நாமக்கல் ஒன்றிய பகுதிகளிலும், நாமக்கல் மாநகரிலும் தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

திருச்செங்கோட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல் வேட்பாளா் பி.எஸ்.மோகனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அதன்பிறகு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் வணிகா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்களை சந்தித்து ஆதரவு கோரினாா்.

அப்போது, வணிகா் சங்கத்தினா் தங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் மனுவாக வழங்கினா். அதிமுக ஆட்சி அமைந்ததும் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இத்தோ்தலில் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வின்போது, வணிகா் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.