மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்! - அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்

News image

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:40 pm

நாமக்கல் தொகுதி வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் உறுதியளித்தாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், புதுச்சத்திரம், மோகனூா், நாமக்கல் ஒன்றிய பகுதிகளிலும், நாமக்கல் மாநகரிலும் தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

திருச்செங்கோட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல் வேட்பாளா் பி.எஸ்.மோகனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அதன்பிறகு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் வணிகா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்களை சந்தித்து ஆதரவு கோரினாா்.

அப்போது, வணிகா் சங்கத்தினா் தங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் மனுவாக வழங்கினா். அதிமுக ஆட்சி அமைந்ததும் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இத்தோ்தலில் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வின்போது, வணிகா் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.