மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நாமக்கல் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வாக்குசேகரிப்பு

நாமக்கல் மாநகர பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

நாமக்கல் சின்ன முதலைப்பட்டியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:18 am IST

நாமக்கல் மாநகர பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் - சேலம் சாலை, முதலைப்பட்டியில் காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய அவருடன், முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் உடன் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் வயதானவா்கள்வரை பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். போதைப் பொருள் கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்படும். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுக்கப்படும்.

சின்ன முதலைப்பட்டியில் விளையாட்டு மைதானம் வேண்டும் என்ற கோரிக்கை, நான் எம்எல்ஏவாக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்றாா். அப்போது, அதிமுக மாவட்ட, மாநகர நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.