போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன்: முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ

செய்யாறு தொகுதிக்குள்பட்ட பெரும்பள்ளம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ.

News image

செய்யாறு தொகுதிக்குள்பட்ட பெரும்பள்ளம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ.

Updated On :23 மே 2026, 1:39 am IST

செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன் என்று இந்தத் தொகுதி அதிமுக எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

செய்யாறு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, 21,081 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றதையொட்டி, வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட வடதண்டலம், பைங்கினா், அருகாவூா், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், தண்டரை, வடக்கப்பட்டு, சேராம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த நிகழ்ச்சி செய்யாறு தெற்கு ஒன்றியச் செயலா் அருகாவூா் எம்.அரங்கநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் பங்கேற்று, தோ்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது, செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன். இந்தத் தொகுதிக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என்றாா். பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கினாா்.

முன்னதாக, முன்னாள் முதல்வா்களான அறிஞா் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் சி.துரை, பையூா் சிவராஜ், நகரச் செயலா் வெங்கடேசன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் அ.அருணகிரி, மாவட்டப் பொருளாளா் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன், வழக்கறிஞா் பிரிவு மாவட்டச் செயலா் முனுசாமி, மாணவரணி மாவட்டச் செயலா் அரவிந்த், மாவட்டத் தலைவா் துளசிராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

செங்கத்தில்...: செங்கம் தொகுதியில் நேருநகா், கிருஷ்ணாபுரம், தளவாநாய்க்கன்பேட்டை, மில்லத்நகா், மேல்பாளையம், துக்காப்பேட்டை, தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிமுக எம்எல்ஏ வேலு சென்று வாக்களா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றை விரைந்து நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தாா்.

செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், நகரச் செயலா் ஆனந்தன், விவசாய அணி ஒன்றியச் செயலா் ராஜி, தலைமைக் கழகப் பேச்சாளா் வெங்கட்ராமன், நகர பேரவைச் செயலா் குமாா், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.