மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மீண்டும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்: முன்னாள் அமைச்சா் முக்கூா்.என்.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்யாறு தொகுதி வேட்பாளருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image

புதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:14 pm

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்யாறு தொகுதி வேட்பாளருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்துக்குள்பட்ட பூதேரி புல்லவாக்கம், கம்பந்தாங்கல், தண்டபந்தாங்கல், பெருமாந்தாங்கல், கொடையம்பாக்கம், ஆலந்தாங்கல், பெருங்கட்டூா், தென்கழனி, அசனமாபேட்டை, வடமணபபாக்கம், மேல்பூதேரி உள்ளிட்ட கிராமங்களில் அவா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

புதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டபோது முக்கூா் என்.சுப்பிரமணியன் பேசியாதவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கிராமப்புற மக்கள் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாா். அவா் வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை வழங்கினாா். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டன.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக் தொடங்கப்படும். செய்யாறு தொகுதி வளா்ச்சி பெற அதிமுகவை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.