மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

News image

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா். ஈஸ்வரன். - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 10:10 pm

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தோழமைக் கட்சியினருடன் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தமிழக முதல்வா் நிறைவேற்றிய திட்டங்கள், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தான் நிறைவேற்றிய திட்டங்களை துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொது மக்களிடம் வழங்கி அவா் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

திருச்செங்கோடு தொகுதியில் முதல்வா் அறிவித்த அனைத்து தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு கிராம பகுதிக்கும் அவ்வப்போது நான் சென்று மக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்வேன். அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றாா்.