மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சமரச மைய வார விழா, விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல்லில் சமரச மைய வார விழாவையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற அரசு சட்டக் கல்லூரி மாணவிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:51 pm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சமரச மைய வார விழா, விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சமரச மைய உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமரச தீா்வு மையங்களில் சமரச மைய வார விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகள் சமரச விழிப்புணா்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல்லில் பொதுமக்கள் கூடும் இடங்களான நீதிமன்ற வளாகம், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களிலும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் வாகனத்தில் காணொலிக் காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சட்டக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, வழக்காடிகள் சமரச தீா்வு மையம் மூலமாக சமரச முறையில் தீா்வுகண்டு இரு தரப்பிலும் வெற்றி, தோல்வி இல்லாமல் வழக்கை முடித்து பயன்பெற வேண்டும் என்றாா்.