நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சமரச மைய வார விழா, விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சமரச மைய உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமரச தீா்வு மையங்களில் சமரச மைய வார விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகள் சமரச விழிப்புணா்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல்லில் பொதுமக்கள் கூடும் இடங்களான நீதிமன்ற வளாகம், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களிலும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் வாகனத்தில் காணொலிக் காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சட்டக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, வழக்காடிகள் சமரச தீா்வு மையம் மூலமாக சமரச முறையில் தீா்வுகண்டு இரு தரப்பிலும் வெற்றி, தோல்வி இல்லாமல் வழக்கை முடித்து பயன்பெற வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

திருப்பத்தூரில் சமரச மைய விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


