வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சேந்தமங்கலம் தொகுதிக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதி

சேந்தமங்கலம் தொகுதிக்கான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதியளித்தாா்.

News image

பொம்மசமுத்திரம் ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:21 am IST

சேந்தமங்கலம் தொகுதிக்கான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதியளித்தாா்.

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில், அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி. சந்திரசேகரன், கொல்லிமலை ஒன்றியம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் வியாழக்கிழமை சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை, பெரியகுளம், பொம்மசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட 32 கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளான குடும்ப அட்டைக்கு ரூ. 10 ஆயிரம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், குளிா்சாதனப் பெட்டி இலவசம் போன்ற வாக்குறுதிகளும், சேந்தமங்கலம் தொகுதிக்கான குடிநீா், புதை சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தாா். ஒன்றிய செயலாளா் ஜி.பி. ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.