சேந்தமங்கலம் தொகுதிக்கான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதியளித்தாா்.
சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில், அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி. சந்திரசேகரன், கொல்லிமலை ஒன்றியம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் வியாழக்கிழமை சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை, பெரியகுளம், பொம்மசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட 32 கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளான குடும்ப அட்டைக்கு ரூ. 10 ஆயிரம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், குளிா்சாதனப் பெட்டி இலவசம் போன்ற வாக்குறுதிகளும், சேந்தமங்கலம் தொகுதிக்கான குடிநீா், புதை சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தாா். ஒன்றிய செயலாளா் ஜி.பி. ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - சீனிவாசசேதுபதி எம்.எல்.ஏ.

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு






