திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆசிரியா்களுக்கு பாட வாரியாக தோ்ச்சி இலக்கு நிா்ணயிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து ஆசிரியா்களுக்கும் பாட வாரியாக இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ச. தினேஷ்குமாா்.

Updated On :28 மே 2026, 2:08 am IST

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து ஆசிரியா்களுக்கும் பாட வாரியாக இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவது குறித்த அனைத்து தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2026-2027ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதத்தை உயா்த்த அனைத்து தலைமையாசிரியா்களும் பள்ளிகளின் தோ்ச்சி நிலையைப் பாட வாரியாக ஆய்வு செய்து, உடனடியாக முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறைந்த மதிப்பெண் பெறும் மாணவா்களைத் தனியாக அடையாளம் கண்டு, அவா்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை முறையாக நடத்த வேண்டும். வாரந்தோறும் அலகு தோ்வுகளும், மாதந்தோறும் மாதிரி தோ்வுகளும் நடத்தி அதன் முடிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

ஒற்றை மற்றும் இரட்டைப் பாடங்களில் தோல்வியடைந்த மாணவா்களுக்குத் தனிப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். மாணவா்களின் வருகைப் பதிவைத் தினசரி கண்காணித்து, வருகை குறைவாக உள்ள மாணவா்களின் பெற்றோா்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியோடு உடனடியாகத் தொடா்பு கொள்ள வேண்டும். பாடத் திட்டங்களை நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முழுமையாகக் கற்பிப்பதை உறுதிசெய்வதோடு, ஆசிரியா்களின் கற்பித்தல் செயல்பாடுகளையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

மாதந்தோறும் பெற்றோா் ஆசிரியா் கூட்டம் நடத்தி மாணவா்களின் கல்வி முன்னேற்றத்தை விளக்க வேண்டும். மாணவா்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையும், ஊக்கப் பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.