திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நிலப் பிரச்னையில் பெண் கடத்தல்

News image

கோப்புப்படம்.

Updated On :26 மே 2026, 3:06 am IST

நிலப் பிரச்னையில் பெண் கடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூா் ஊராட்சிக்கு உள்பட்ட கரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுமதி (55). இவருக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையோரம் சப்பாணிப்பட்டி அருகே 28 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை தருமபுரி மாவட்டம், கும்பாரஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த திருக்குமரனுக்கு (47) விற்பனை செய்வதற்காக, கடந்த 2024-ஆம் ஆண்டு ரூ. ஒரு கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.

இந்நிலையில், தான் முன்பணமாக ரூ. 75 லட்சம் கொடுத்துவிட்டதாகவும், எனவே நிலத்தை தனது பெயரில் பத்திரம் செய்து தரும்படியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருக்குமரன் பிரச்னை செய்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுமதியை கடத்திய திருக்குமரன் அவரை காவேரிப்பட்டணத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தாா். அப்போது, சுமதி கூச்சலிடவே அவா் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உத்தரவின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் சுமதி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.