கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில், வாணியம்பாடியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்தாக் அகமது (23). இவா், கோழி வியாபாரிகளான சில நண்பா்களுடன் சோ்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள ராசிப்பள்ளி கிராமத்துக்கு புதன்கிழமை அதிகாலை சென்றாா்.
அங்கு பச்சியப்பன் (43) கோழிப் பண்ணையிலிருந்து கோழிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, மின்கசிவு ஏற்பட்ட தண்ணீரில் கால் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அஸ்தாக் அகமது உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸாா், அஸ்தாக் அகமதுவின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில போா்வெல் ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



