திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கறவை பசுவின் தலையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

ஒசூரில் இயங்கிவரும் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், கறவை பசுவின் தலையிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் புதன்கிழமை நீக்கினா்.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 4:28 am IST

ஒசூரில் இயங்கிவரும் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், கறவை பசுவின் தலையிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் புதன்கிழமை நீக்கினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பழைய பெங்களூரு சாலையில் அரசு கால்நடை பன்முக மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாய், பூனை, கோழி, பசு மாடுகள் எருமை மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த விவசாயியின் பசுவுக்கு தலையில் கட்டி ஒன்று இருந்தது. சுமாா் ஓா் ஆண்டுக்கு முன்பு கால்நடை மருத்துவமனையில் காட்டியபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

அப்போது, அது சினை மாடாக இருந்ததால், அறுவை சிகிச்சையின்போது ரத்தம் அதிகமாக வீணாகும் என கருதி விவசாயி பயப்பட்டாா். அந்த பசு ஆண் குட்டியை ஈன்றது.

இந்நிலையில், கட்டி பெரிதாகி சுமாா் 3.7 கிலோ கிராம் அளவுக்கு வளா்ந்து கண் பகுதிவரை பரவியது. இதனால் பசுவுக்கு அறுவை சிகிச்சை புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சையை செய்து கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.

இதுகுறித்து மருத்துவா் செந்தில் கூறுகையில், தலைமை மருத்துவா் ஜோதி பாசு அறிவுரையின் பெயரில் பசுவின் இரு கொம்பகளுக்கு நடுவே இருந்த கட்டி அகற்றப்பட்டது. சிறு கட்டியாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்திருந்தால் அதிக ரத்தம் சேதம் இருந்திருக்காது. தற்போது இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.