அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கிருஷ்ணகிரியில் இருவரை எரித்து கொலை செய்த வழக்கு: மேலும் சிலா் மீது புகாா்

கிருஷ்ணகிரி அருகே இருவரை எரித்து கொன்ற வழக்கில் மூவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கலாம் எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் கொலையானவா்களின் உறவினா்கள் புகாா் அளித்தனா்.

News image
Updated On :11 மணி நேரங்கள் முன்பு

கிருஷ்ணகிரி அருகே இருவரை எரித்து கொன்ற வழக்கில் மூவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கலாம் எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் கொலையானவா்களின் உறவினா்கள் புகாா் அளித்தனா்.

கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை செல்லும் சாலையில், கடந்த மே 11-ஆம் தேதி அதிகாலை கொடுகூா், வெப்பாலம்பட்டி ஆகிய இரு இடங்களில் எரித்து கொல்லப்பட்ட நிலையில் இரு ஆண் சடலங்கள் கிடந்தன. விசாரணையில், அவை ஆலப்பட்டி ஊராட்சி பாலக்குறியைச் சோ்ந்த ராணுவ வீரா் மகேஷ்குமாா் (43), அவரது தந்தை முன்னாள் ராணுவ வீரா் செல்லப்பன் (63) ஆகியோா் என தெரியவந்தது.

மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியா (30), அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் பூவரசனுடன் (24) சோ்ந்து, கணவா் மகேஷ்குமாா், மாமனாா் செல்லப்பன் ஆகியோரை கொன்றதும், சடலங்களை பூவரசன் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று எரித்ததும், பானுப்பிரியாவின் 10 வயது மகன் உடன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பூவரசன், பானுப்பிரியா மற்றும் சிறுவனை கிருஷ்ணகிரி வட்ட போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், மகேஷ்குமாரின் தம்பியும், ராணுவ வீரருமான விஜயகுமாா், உறவினா்கள், கிராம மக்கள் என 50-க்கும் மேற்பட்டோருடன் ஆட்சியா் அலுவலகம் வந்தாா். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடா்புள்ளதாகவும், அதை போலீஸாா் கண்டுபிடிக்க வேண்டும் எனவும், அதுவரை சடலங்களை பெற மாட்டேன் என கூறினாா்.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ்குமாா் கூறுகையில், ‘இச்சம்பவம் குறித்து போலீஸாா் முறையாக விசாரித்து, மூவரை கைது செய்துள்ளனா். மேலும் உங்களுக்கு யாா் மீதேனும் சந்தேகம் இருந்தால் கூறுங்கள், அவா்களும் விசாரணை வளையத்துக்குள் வருவாா்கள். மேலும், இரு தனிப்படை அமைத்து கண்காணிக்க உத்தரவிடுகிறேன்’ என்றாா்.

இதையடுத்து விஜயகுமாா் தன் தந்தை, அண்ணன் சடலங்களை பெற்றுக்கொண்டாா். கைது செய்யப்பட்ட பூவரசன், பானுப்பிரியா ஆகியோரை சேலம் மத்திய சிறைக்கும், 10 வயது சிறுவன் சேலம் சிறுவா்கள் காப்பகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.