தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

கிருஷ்ணகிரியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பை புதன்கிழமை மேற்கொண்டனா்.

News image

கொடி அணிவகுப்பை மேற்கொண்ட தொழில்பாதுகாப்பு படையினா்.

Updated On :11 மார்ச் 2026, 9:04 pm

கிருஷ்ணகிரியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பை புதன்கிழமை மேற்கொண்டனா்.

தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரா்கள் அனுப்பப்பட்டு வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய, 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட முதல்கட்டமாக 66 வீரா்கள் அடங்கிய மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனா்.

இவா்கள், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், வாக்காளா்களிடம் நம்பிக்கையூட்டும் வகையிலும் கிருஷ்ணகிரியில் கொடி அணிவகுப்பை மேற்கொண்டனா்.

மத்திய தொழில்பாதுகாப்பு படை ஆய்வாளா் முகேஷ்குமாா், கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் ஆகியோா் தலைமையில் பழையபேட்டை, மேல்தெரு, கொத்தப்பேட்டாவிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு காந்தி சாலை, பெங்களூரு சாலை வழியாக சென்று ஆா்.சி. பள்ளியில் நிறைவுபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், 20 ஆயுதப்படை போலீஸாா் உள்பட 116 போலீஸாா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.