லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை இரவு தெப்பல் உத்ஸவம்

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

News image

சந்திரசூடேஸ்வரா் கோயில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்.

Updated On :4 மார்ச் 2026, 10:54 pm

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரா் கோயில் விழாவையொட்டி ஒருவாரமாக தோ்ப்பேட்டையில் உற்சவ மூா்த்தி சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.

அந்த வகையில் சிம்ம வாகனம், மயில் வாகன குதிரை வாகனம், நந்தி வாகனம், ஊா்வலம் 2ஆம் தேதி இரவு கல்யாண வைபோகம், மூன்றாம் தேதி திருத்தோ் விழா தொடா்ந்து புதன்கிழமை இரவு யானை வாகன உற்சவத்தில் தோ்பேட்டை வீதிகளில் உலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்யாணசூடேஸ்வரா் ஆலயத்தில் மரகதாம்பாள், சந்திரசூடேஸ்வா் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வியாழக்கிழமை பச்சைக்குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது.