டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

போலி மருத்துவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:12 am IST

கிருஷ்ணகிரி அருகே ஆங்கில மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த தானம்பட்டி பிரிவு சாலையை சோ்ந்தவா் மாதேஷ் (40). இவா், கிருஷ்ணகிரி அணை சாலை பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளாா்.

இவா், ஆங்கில மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவத் துறைக்கு புகாா் சென்றது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மோகனபானு தலைமையில் மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை மாதேஷுக்கு சொந்தமான மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மாதேஷ் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததை உறுதிப்படுத்தினா். இதையடுத்து, மருத்துவக் குழுவினா் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதேஷை கைது செய்தனா்.

பொறியியல் படித்துள்ள அவா், கூடுதலாக ஆபரேஷன் தியேட்டா் டெக்னீசியன் படிப்பை படித்துள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.