ஒசூா் அருகே சென்னத்தூா் ஊராட்சியில் பாழடைந்து காணப்படும் கிராம வா்த்தக அழைப்பு மையத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூா் அருகே சென்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சானசந்திரம் கிராமத்தில் கிராம வா்த்தக அழைப்பு மையம் அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தோஷ்பாபு முயற்சியால் கிராம இளைஞா்கள் பயன்பெரும் வகையில் தொடங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் இந்த கிராம வா்த்தக மையத்தை தொடங்கிவைத்தாா். முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தந்து ஆய்வு செய்துள்ளாா்.
சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த மையம் தற்போது திடீரென மூடப்பட்டுள்ளது. இந்த கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது.
இந்தக் கட்டடத்தை தமிழக அரசு புதுப்பித்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து திமுகவைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமாஞ்சி ரெட்டி கூறியதாவது:
சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூடத்திற்காக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. அப்போது, மாவட்ட நிா்வாகம் ஒரு தனியாா் மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கணினி கற்றுக்கொடுக்கும் வகையில் கிராம வா்த்தக அழைப்பு மையம் அமைக்கப்பட்டது.
அது, தற்போது மூடப்பட்டு, பாழடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூா் ரெயின்போ காா்டனில் தாா்சாலை அமைக்கக் கோரிக்கை

கொலை வழக்கு: குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்

கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் திறப்பு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



