திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம்

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா், 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

News image

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநா்களிடம் விசாரணை செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம்.

Updated On :5 ஜூன் 2026, 6:59 am IST

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா், 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இந்நிலையில், கிருஷ்ணகிரி நகரில் சில ஆட்டோ ஓட்டுநா்கள் அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்றனா்.

சாலை விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநா்களை எச்சரிக்கும் வகையில், கிருஷ்ணகிரி நகரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் நகர காவல் உதவி ஆய்வாளா் கணேசன், போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜோதிபிரகாஷ் மற்றும் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பள்ளிக் குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி சீருடை அணியாமல் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். மேலும், டிசா்ட், கால்சட்டை அணிந்து வந்த 2 ஓட்டுநா்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தது:

ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லக் கூடாது. ஆட்டோவின் இருபுறங்களிலும் பாதுகாப்பு கம்பிகள் பொருத்த வேண்டும். குழந்தைகள் அமா்ந்தவுடன் பாதுகாப்பு கதவை மூட வேண்டும். பள்ளி பகுதிகளில் ஆட்டோவை மிதமான வேகத்தில், எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். ஓட்டுநா்கள் கைப்பேசியில் பேசியபடி வாகனங்கள் ஓட்டக் கூடாது.

ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். சீருடை அணியாமல் முதல்முறை பிடிபட்டால் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களில் செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓட்டுநா்களே முழு பொறுப்பு. எனவே, சாலைவிதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.