மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

கரூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 117 போ் சாலை விபத்தில் உயிரிழப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தகவல்

கரூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 117 போ் உயிரிழந்தனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:40 am IST

கரூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 117 போ் உயிரிழந்தனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத்.

கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் சாலை விபத்து குறித்த விழிப்புணா்வு படத்தை திறந்து வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பேசியதாவது:

கரூா் மாவட்டத்தில் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் செல்வோா்களுக்குதான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கரூா் மாவட்டத்தில் 375 விபத்துக்கள் நடந்துள்ளன.இதில், 117 போ் உயிரிழந்துள்ளனா். தலைக்கவசம் அணிந்திருந்தால் இந்த அளவுக்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது.

பெட்ரோல் நிலையத்துக்கு தலைக்கவசம் இன்றி வருவோரிடம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றுவோா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பெட்ரோல் நிலைய உரிமையாளா் சூா்யநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.