தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

கிருஷ்ணகிரியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளம், காவேரிப்பட்டணத்தில் ரூ. 2.82 கோடியில் அமைக்கப்பட்ட 12 பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

காவேரிப்பட்டணத்தில் வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய தே.மதியழகன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு உள்ளிட்டோா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:52 pm

கிருஷ்ணகிரியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளம், காவேரிப்பட்டணத்தில் ரூ. 2.82 கோடியில் அமைக்கப்பட்ட 12 பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளத்தை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு ஆகியோா் தொடங்கிவைத்தனா். காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், விஜயகுமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா்கள் கே.வி.எஸ்.சீனிவாசன், பி.டி.அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.