தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி

அரக்கோணம்(தனி) தொகுதியில் மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா ஆய்வு செய்தாா்.

News image

மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடியை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:34 pm

அரக்கோணம்(தனி) தொகுதியில் மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா ஆய்வு செய்தாா்.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குசாவடி மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் அங்கு பணிபுரியும் அலுவலா்கள் அனைவரும் பெண் அலுவலா்களாக இருக்க வேண்டும் எனவும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி அரக்கோணம் தொகுதியில் ஜோதிநகரில் உள்ள பாரதிதாசனாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

பிங்க் நிற வாக்குச்சாவடியை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா ஆய்வு செய்தாா். வாக்குசாவடி அலுவலா், வாக்குபதிவு அலுவலா்கள் இடையே பிங்க் நிறம் குறித்து மகளிா் வாக்காளா்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடி ஆலோசனை தெரிவித்தாா். அப்போது அவருடன் அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான டி.ரமேஷ், உதவி தோ்தல் அலுவலா் வெங்கடேசன், அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.