டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஒசூரில் ரூ. 100 கோடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ரூ. 100 கோடியில் கட்டப்பட்ட ஒசூா் அரசு மாவட்ட மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம்

News image
ஒசூரில் கட்டப்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், கே.கோபிநாத் எம்.பி., மாநகர மேயா் எஸ்.ஏ,சத்யா.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:23 pm

Syndication

ஒசூா்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ரூ. 100 கோடியில் கட்டப்பட்ட ஒசூா் அரசு மாவட்ட மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த தேசிய சுகாதார குழுமம் திட்டத்தின்கீழ் ரூ. 100 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, இப்பணிக்காக நாளிகபெட்ட அக்ரஹாரம் கிராமத்தில் ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் 6.02 ஏக்கா் நிலம் வழங்கப்பட்டது. இக்கட்டடங்களுக்கு 18.01.2024 அன்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்தன.

அதையடுத்து, ஒசூா் அரசு மாவட்ட மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பாக, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் ரூ. 16 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் இம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் குத்துவிளக்கு ஏற்றி மையத்தை பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் ஆனந்தய்யா, இணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) மரு.மோகனபானு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் செந்தில் குமாா், ஒசூா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகாரே, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், முதன்மை மருத்துவ அலுவலா்கள் மரு.லட்சுமி ஸ்ரீ, மரு.புவனா ஜெயபால், மண்டல குழுத் தலைவா்கள் திரு.மாதேஸ்வரன், ரவி, சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா் ராதா ஞானசேகரன், வட்டாட்சியா் குணசிவா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.