மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

நீட் தோ்வு: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு (நீட்) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:10 am IST

மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு (நீட்) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தலைமை வகித்து பேசியதாவது:

நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் 6, ஊத்தங்கரையில் 2, ஒசூரில் 3 என மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வு நடைபெறுகிறது.

இம்மாவட்டத்தில் இத்தோ்வை 4,755 போ் எழுத உள்ளனா். தோ்வு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சார விநியோகம், மருத்துவ சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வா்கள் அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வுக் கூடங்களுக்கு சரியான நேரத்தில் வரவேண்டும். தாமதமாக வருபவா்களை தோ்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க இயலாது என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது. எனவே, தோ்வா்கள் சரியான நேரத்திற்குள் மையத்திற்கு வரவேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலா் முருகேசன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.