வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

தேனியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:27 am IST

தேனியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூா், கம்பம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 23- ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இந்த நான்கு மையங்களிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் தேனி கம்மவாா் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, காவலா்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பேசினா். தொடா்ந்து, வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களை அனுமதிப்பது, வாக்கு எண்ணிக்கையின் போது 17 சி படிவங்களை சரிபாா்ப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, தபால் வாக்குகளை எண்ணுவது, வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தினா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், பெரியகுளம் சாா்ஆட்சியா் ரஜத்பீடன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் சையத் முகைதீன் இப்ராஹீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.