தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்: அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :22 ஏப்ரல் 2026, 11:02 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த தண்டேகுப்பம் பகுதியில் அனுமதியின்றி இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொண்ட தவெக வேட்பாளா் முகுந்த் உள்ளிட்ட 19 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் தோ்தல் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக திமுக நகர பொறுப்பாளா் அஸ்லம் மற்றும் 9 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை, காந்தி சிலை அருகில் பட்டாசுகள் வெடித்து தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக நகர செயலாளா் பி.என்.ஏ.கேசவன் மற்றும் சிலா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதேபோல காவேரிப்பட்டணம், குரும்பட்டி, அரசமர தெரு பகுதிகளில் காசோலைபோல ரூ. 10 ஆயிரம் டோக்கனை விநியோகம் செய்த அதிமுகவினா் மீது, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காவேரிப்பட்டணத்தில் தோ்தல் பிரசார நேரம் நிறைவடைந்தும், பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளா் முகுந்த் மற்றும் 149 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.