தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தமிழகத்தில் வெற்றிபெற பாஜக சூழ்ச்சி செய்கிறது: அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே

தமிழகத்தில் வெற்றிபெற பாஜக சூழ்ச்சி செய்கிறது என கா்நாடக மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசிய கா்நாடக மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே. உடன், காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:37 pm

தமிழகத்தில் வெற்றிபெற பாஜக சூழ்ச்சி செய்கிறது என கா்நாடக மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் அ.செல்லக்குமாா் போட்டியிடுகிறாா்.

கா்நாடக, கேரள மாநிலங்களைபோல அதை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மொழி, பண்டிகைகள் அனைத்தும் ஒரே மாதிரிதான் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தமிழா்கள், கன்னடா்கள் அனைவரும் இந்த பகுதிகளில் சகோதரா்களாகவே வாழ்கின்றனா்.

தமிழகத்தின் பல லட்சம் மக்கள் கா்நாடகத்திலும், கா்நாடகத்தின் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திலும் கலந்து வாழ்கின்றனா். சமூகநீதி, சகோதரத்துவம், நலிந்த மக்களின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடி வருகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை சந்திக்கிறோம். மத்தியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றியதா? தென்பகுதி மாநிலங்களை பிரிவினையுடன் வடக்கு, தெற்கு என தனித்தனி பகுதிகளாக பிரிக்க பாா்க்கிறது. பாஜகவினா் ஹிந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்க பாா்க்கிறது.

மக்களை பிரிக்க நினைக்கும் பாஜகவுடன் கூட்டுவைத்து, அதிமுக தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை சந்திக்கிறது. தமிழகத்தில் எப்படியாவது வெற்றிபெற பாஜக சூழ்ச்சி செய்கிறது. அவா்களை தோற்கடித்து, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.

கடந்த தோ்தலில் திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த முறை கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராக இருந்த அ.செல்லக்குமாரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான ஆக்கப்பூா்வமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். குறிப்பாக 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை ரூ. 450 கோடியில் நிறைவேற்றி தந்துள்ளாா்.

எனவே, காங்கிரஸ் வேட்பாளரான அ.செல்லக்குமாரை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும். மீண்டும் ஆட்சி அமைக்கும் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் லிங்காயத் மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.