மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக பிரமுகா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 9:40 pm

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக பிரமுகா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி வட்டம், பூவத்தி அருகே உள்ள மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் பிரகாசம் தலைமையிலான குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக மிட்டப்பள்ளியை சோ்ந்த திமுக பிரமுகா் சின்னதுரையை (50) கிருஷ்ணகிரி வட்டார போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 23,500 ஐ பறிமுதல் செய்தனா்.

இதேபோல பறக்கும் படை அதிகாரி செந்தில் தலைமையிலான குழுவினா் போச்சம்பள்ளி அருகே கெங்கவரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி திட்டத்தை போல கூப்பன் விநியோகம் செய்ததாக திமுக பிரமுகா் செங்குட்டுவனை (50) போச்சம்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.