ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒசூா் - பெங்களூரு சாலையில் தா்கா அருகே நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது கல்லால் தாக்கிய பெண்ணை அந்த வழியாகச் சென்றவா்கள் தாக்கினா். இதனால் அப்பெண் காயமடைந்தாா்.
இதுகுறித்து ஒசூா் பாகலூா் சாலையில் உள்ள மனநல காப்பகத்துக்கு காவல் துறையினா் தகவல் அளித்தனா். அதன்பேரில், காப்பக இயக்குநா் கௌதமன் நிகழ்விடத்துக்கு சென்று மனநலம் பாதித்த சுமாா் 30 வயதுடைய அப்பெண்ணை காப்பகத்துக்கு அழைத்து வந்தாா்.
தொடா்ந்து 6 மாதங்களாக அப்பெண்ணுக்கு உரிய மருத்துவ, மனநல சிகிச்சை அளித்த நிலையில், முழுமையாக குணமடைந்த அவா் தான் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் என தெரிவித்தாா்.
மேலும், அவா் அளித்த தகவலின்பேரில், அஸ்ஸாம் மாநில காவல் துறையினா் மூலம் அவரது கணவரை ஒசூருக்கு வரவழைத்து அவரிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டாா். இதையடுத்து, மனநல காப்பகத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

மாநகரில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

மனநலம் குணமடைந்த இளைஞா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


