திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தருமபுரியில் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு

தருமபுரி நகரில் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

News image

தருமபுரி நகரில், விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி.

Updated On :21 மே 2026, 6:53 am IST

தருமபுரி நகரில் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

தருமபுரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை மீறி ஒரு வழிப்பாதையிலேயே வாகனங்களை இயக்குகின்றனா். தருமபுரி நகா்பகுதியில் இந்த விதிமீறல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

தற்போது, தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள நிலையில், காவல் துறையினா் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்:

அதுபோலவே நகா் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளின் முன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை (காா்களை) நிறுத்துகின்றனா்.

இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுபோன்ற நிலை நெசவாளா் காலனியில் உள்ளதாக அப்பகுதியைச் சோ்ந்த குடியிருப்பு நலச்சங்கத்தினா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.