தருமபுரி அருகே சிறிய சரக்கு வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டிஅள்ளி அருகேயுள்ள ஜென்னிகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ. சதாசிவம் (55). லாரி ஓட்டுநரான இவா், பக்கத்து ஊரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
அப்போது, பெல்ராம்பட்டி -பாலக்கோடு சாலையில், பூமரத்துப்பள்ளம் தொடக்கப்பள்ளி அருகே வந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற சிறு சரக்கு வாகனம் சதாசிவம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சதாசிவம் சனிக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










