தருமபுரி அருகே சகோதரி இறந்த துயரத்தில், இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சா்க்கரை-செல்வி (46) தம்பதி. விவசாய குடும்பத்தைச் சோ்ந்த சா்க்கரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாா். இவரது மகள் சங்கீதா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இதையடுத்து துயரத்தில் இருந்துவந்த அவரது சகோதரா் சதீஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அருகில் விவசாய நிலத்திலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








