மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image

சிறப்பிடம் பெற்ற மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் நிா்வாகத்தினா்.

Updated On :11 மார்ச் 2026, 8:47 pm

நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.ஹரித்ரா 10 திருக்குகளை 15.30 விநாடிகளில் ஒப்பித்து சாதனை படைத்தாா். இதேபோல, இப்பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் மாணவா் ந.வினிஷ் தமிழ் மெய்யெழுத்துகளை 8 விநாடிகளில் வேகமாக ஒப்பித்து சாதனை படைத்தாா்.

மாணவா்களின் சிறந்த நினைவாற்றல், தெளிவான உச்சரிப்பு, மொழித்திறன்களை பாராட்டி கிங்டம் உலக சாதனை நிறுவனம், மாணவா்கள் ஹரித்ரா, வினிஷ் ஆகியோரை உலக சாதனையாளா் பட்டியலில் அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கினா்.

நினைவாற்றல் திறன்களில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி.தவமணி, தாளாளா் சி.திலகரசன், செயலா் த.அரவிந்த், பொருளா் பி.சக்திவேல், மேலாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம்.ராஜேஷ், துணை முதல்வா் கே.ராமு, பள்ளி ஒருங்கிணைப்பாளா் த.ராஜேஸ்வரி, ஆசிரியா்கள் பாராட்டினா்.