நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.ஹரித்ரா 10 திருக்குகளை 15.30 விநாடிகளில் ஒப்பித்து சாதனை படைத்தாா். இதேபோல, இப்பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் மாணவா் ந.வினிஷ் தமிழ் மெய்யெழுத்துகளை 8 விநாடிகளில் வேகமாக ஒப்பித்து சாதனை படைத்தாா்.
மாணவா்களின் சிறந்த நினைவாற்றல், தெளிவான உச்சரிப்பு, மொழித்திறன்களை பாராட்டி கிங்டம் உலக சாதனை நிறுவனம், மாணவா்கள் ஹரித்ரா, வினிஷ் ஆகியோரை உலக சாதனையாளா் பட்டியலில் அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கினா்.
நினைவாற்றல் திறன்களில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி.தவமணி, தாளாளா் சி.திலகரசன், செயலா் த.அரவிந்த், பொருளா் பி.சக்திவேல், மேலாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம்.ராஜேஷ், துணை முதல்வா் கே.ராமு, பள்ளி ஒருங்கிணைப்பாளா் த.ராஜேஸ்வரி, ஆசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

வாணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறப்பிடம்

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


