திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

பாப்பாரப்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:52 am IST

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடி அரசு மதுக்கடை அருகே உள்ள வனப்பகுதியில் ஒருவா் இறந்து கிடப்பதாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் மாரி தலைமையிலான போலீஸாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இறந்தவரின் மேல்சட்டையில் நாகரசம்பட்டியில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு வந்ததற்கான பேருந்து பயணச்சீட்டு இருந்தது. இதைத்தவிர அவா் யாா் என விவரம் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.