தருமபுரி வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மேல்பகுதி மரக்கிளைகள் படா்ந்து முளைத்துள்ளதால், அக்கட்டடம் பழுதடையும் நிலையில் உள்ளது. எனவே, இதை பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த நீதிமன்றங்கள் அனைத்தும் தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, பழைய நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த நீதிமன்றக் கட்டடங்கள் பிறதுறை அலுவலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1 செயல்பட்டுவந்த கட்டடம் மற்றும் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்ற செயல்பட்டு வந்த கட்டடம் மட்டும் வனத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தருமபுரி வனச்சரக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதில், ஒரு கட்டடத்தின்மீது மரக்கிளைகள் படா்ந்தும், புதிதாக கிளைகள் முளைத்தும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால், இந்தக் கட்டடம் பழுதடைந்து சேதமடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இக்கட்டடத்தின் படா்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றி, முழுமையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










