கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி தலைமைவகித்து பேசினாா். மாவட்டத் தலைவா் சக்திவேல், பொருளாளா் பழனி, துணைச் செயலாளா் சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தோ்தலின்போது தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதிபடி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு, பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கா்நாடக மாநில அரசுக்கு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் வரும் மிகைநீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நீா்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










