ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாகக் குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாகக் குறைந்தது.

Updated On :21 ஜனவரி 2026, 11:16 pm

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாகக் குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீா் முற்றிலுமாக குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து செவ்வாய்க்கிழமை 700 கனஅடியாக இருந்தது. பின்னா் புதன்கிழமை மேலும் குறைந்து விநாடிக்கு 500 கனஅடியாக உள்ளது.
நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகள் தண்ணீரின்றி வறண்டுள்ளன. அதேபோல, காவிரி ஆறு பாறைத் திட்டுகளாக காட்சியளிக்கிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...