இத்தகைய சிறப்பு மிக்க தருமபுரி மாவட்ட பட்டுக்கூடு வா்த்தக மையத்துக்கு புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ. 19.20 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 80 ஆயிரம் சதுரஅடியில் தரைத்தளம் மட்டும் அமைகிறது. எத்தனை விவசாயிகள் வந்தாலும் அங்கு தங்கியிருந்து தங்களது பட்டுக்கூடுகளை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தங்குமிடம், ஓய்வறைகள், கழிவறைகள், பட்டுக்கூடுகளை இருப்பு வைக்கும் இடம், மேடைகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 50 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து வா்த்தக மையம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இது திறக்கப்படும் நிலையில், தருமபுரி பட்டுக்கூடு மையம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.