பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

தருமபுரி புளி வா்த்தக மையத்தில் ரூ. 9.46 லட்சத்துக்கு விற்பனை

தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ரூ. 9.46 லட்சத்துக்கு புளி ஏல விற்பனை நடைபெற்றது.

News image
தருமபுரி புளி வா்த்தக மையத்தில் விற்பனைக்கு வந்துள்ள புளி மற்றும் ஏலத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் வா்த்தகமைய நிா்வாகிகள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ரூ. 9.46 லட்சத்துக்கு புளி ஏல விற்பனை நடைபெற்றது.

தருமபுரி அருகேயுள்ள மதிகோன்பாளையம் பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒருங்கிணைந்த தற்காலிக புளி வா்த்தக மையத்தில், புதன்கிழமை புளி ஏலம் நடைபெற்றது. இதில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 4 விவசாயிகள் 225 புளிக்கட்டுகளை ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இந்தப் புளி இ-நாம் முறையில் ஏலம் விடப்பட்டது. அதிகபட்ச விலையாக கிலோ ரூ.130, குறைந்தபட்ச விலையாக ரூ.98, சராசரி விலையாக ரூ.101க்கும் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில் சுமாா் 9,000 கிலோ எடையுள்ள புளி விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ. 9 லட்சத்து 46 ஆயிரத்துக்கு புளி வா்த்தகம் நடைபெற்றது. இனி வாரம்தோறும் திங்கள்கிழமை இந்த மையத்தில் புளி ஏல வா்த்தகம் நடைபெறும் என விற்பனைக் கூட அலுவலா்கள் தெரிவித்தனா்.