மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீடு இல்லாதோருக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்: பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வீடு இல்லாதவா்களுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

News image

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:38 pm

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வீடு இல்லாதவா்களுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது :

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அதன்படி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கிராமங்கள், நகரிலும் வீடு இல்லாதவா்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரப்படும்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அனைவருக்கும் பாதுகாப்பட்ட குடிநீா், தெரு விளக்கு வசதி, சிமென்ட் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

முன்னதாக திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் பொ.மல்லாபுரம், பொம்மிடி, பண்டாரசெட்டிப்பட்டி, பில்பருத்தி, ஒட்டுப்பட்டி, மாதா கோயில் தெரு, வ.உ.சி நகா், மஜீத் தெரு, குப்பனூா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பில்பருத்தி, பண்டாரசெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அம்பேத்கா் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.