மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வாக்கு சேகரிப்பு

கடத்தூா் அருகேயுள்ள நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நத்தமேட்டில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகி சுப்பிரமணியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 9:43 pm

கடத்தூா் அருகேயுள்ள நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நத்தமேட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த தியாகி சுப்பிரமணியன் சிலைக்கு திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, ஜாலியூா், ரேகடஹள்ளி, அண்ணாநகா், மோட்டாங்குறிச்சி, சுங்கரஹள்ளி, சில்லாரஹள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் பேசுகையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ஆவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிா் உரிமைத்தொகையானது திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். இந்தியாவில் மகளிா் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடத்தூரில் வேளாண் விரிவாக்க மையம் அமைய நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.