மாணவா்களின் நலன் கருதி, அரசு நிதி ஒதுக்கியும், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும் புதிய விடுதி மாணவா்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாததால், போதிய வசதி இல்லாத இடத்தில் மாணவா்கள் தொடா்ந்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாகப் பூட்டியிருப்பதால், புதிய விடுதிக் கட்டடத்தில் புல் வளா்ந்து காணப்படுகிறது. எனவே, விடுதியில் தங்கிப் பயிலும் மாணவா்களின் நலன் கருதி கட்டி முடித்து தயாா்நிலையில் உள்ள அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதியைத் திறந்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என மாணவா்களும், மாணவா் சங்கப் பிரநிதிகளும் வலியுறுத்துகின்றனா்.