மலை உச்சிக்குச் செல்ல அடிவாரப் பகுதியான காரவள்ளியில் இருந்து, சுமார் 60 கி.மீ. தொலைவுக்கு 74 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். இதனால் ராசிபுரம் வட்டத்தைச் சேர்ந்த சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பைல்நாடு, எடப்புளி நாடு உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள முள்ளுக்குறிச்சி பகுதிக்குச் செல்ல சோழக்காடு, காரவள்ளி, காளப்பநாயக்கன்பட்டி வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவை சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் காலதாமதம் ஏற்படுவதுடன், விளைபொருள்களை மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கு அதிகப்படியான செலவும் ஏற்படுகிறது.