டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழப்பு

தருமபுரி அருகே விவசாயி ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:31 am IST

தருமபுரி அருகே விவசாயி ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பிக்கம்பட்டி அருகேயுள்ள கிராமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. முனியப்பன் (60). இவா் தனது மனைவி சாரதாவுடன் வெள்ளிக்கிழமை தங்களது நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனா்.

முற்பகலில் அவரது மனைவி பகல் உணவுத் தயாரிக்க வீட்டுக்கு செல்வதாகவும், பகல் உணவுக்கு வீட்டுக்கு வருமாறும் கூறி சென்றுவிட்டாா். பகல் நீண்ட நேரமாகியும் முனியப்பன் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினா் வயலில் சென்று பாா்த்தபோது, அங்கிருந்த விவசாய கிணற்றில் முனியப்பன் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்புத் துறையினா் அவரை மீட்டு, பாலக்கோடு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முனியப்பன் இறந்து விட்டதை உறுதிசெய்தனா். அதன்பேரில் பாப்பாரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.