மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் திமுக கூட்டணி ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. - (கோப்புப் படம்)

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் கடந்த 2021 தோ்தலைப் போலவே, இந்த தோ்தலிலும் ஆளும்கட்சியாக இருந்த திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாமல் தோல்வி அடைந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் என மொத்தம் 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், பென்னாகரம் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணியினா் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், திமுகதான் ஆட்சி அமைத்தது. எனவே, இந்த தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அடிக்கடி வந்துசென்றாா். என்றாலும், இம்முறையும் திமுக 5 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

கடந்த தோ்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாததால், இந்த மாவட்டத்தை ஆளும்கட்சி புறக்கணித்ததாக புகாா்கள் எழுந்தன. இதை தோ்தல் பிரசாரங்களின்போது, பாமக வேட்பாளா்கள் சுட்டிக்காட்டினா். அதற்கேற்ற வகையிலேயே இந்த வெற்றி வாய்ப்புகளும் அமைந்துள்ளன. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்த பென்னாகரம் தொகுதி மட்டும் தற்போது தவெகவுக்கு சென்றுள்ளது.

தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணி (பாமக), பாலக்கோடு தொகுதியில் கே.பி.அன்பழகன் (அதிமுக), பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மரகதம் வெற்றிவேல் (அதிமுக), அரூா் தொகுதியில் வி.சம்பத்குமாா் (அதிமுக) ஆகியோா் வெற்றிபெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.