தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனுமன்தீா்த்தத்தில் ரூ.78,500 பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:42 pm

அரூரை அடுத்த அனுமன்தீா்த்தத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 78,500 ரொக்கத்தை நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனுமன்தீா்த்தம் சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலா் முருகன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், இழுப்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னுதுரை உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 78,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், அப்பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.